மஜக நெல்லை மாவட்டம் பாளை பகுதியின் கலந்தாய்வு கூட்டம்.!துணை பொதுச்செயலாளர் தைமிய்யா துணைச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பங்கேற்பு.!


நெல்லை.அக்.19.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், பாளை பகுதி சார்பாக மாநகர் பகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் பாளை வண்ணார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பாளை பகுதி செயலாளர் ராபியாசேக் என்ற சேக் அப்துல் காதர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார், பொருளாளர் மைதீன் ராஜா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காயல் அஹமது சாகிபு ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலுல் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா உள்ளிட்டோர் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் பேசினர்.

நெல்லையில் மஜக தலைமை செயற்குழு கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ள தலைமை நிர்வாக குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அச் செயற்குழுவை சிறப்பான முறையில் நடத்திடவும். மேலும் மாநகர் பகுதிகளுக்கான தேர்தல் பணிகுழுவை விரைவில் அமைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் A1 காயல் மைதீன், MJTS தலைவர் நாகூர்மீரான், மனித உரிமை பாதுகாப்பு அணி N.அப்பாஸ், வழக்கறிஞர் அணி மன்சூர் அலி, விவசாய அணி நெல்லை ஜாஹிர், பகுதி நிர்வாகிகள் தமீம் அன்சாரி, கலீல், ஐடிஐ சங்கர், முருகேசன், ஹபிபுல்லாஹ், இஸ்மாயில், காந்திநகர் ரவி, டவுண் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பதிவுசெய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
18-10-2020