நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சி உறுப்பினர் மஜகவில் இணைந்தார்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!


அக்.18,

அக்.17 நேற்று தொடங்கி டிச.31 முடிய 75 நாட்கள் தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது.

மேலும் இதை முன்னிட்டு புதிய கிளைகள் வேகமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாளான இன்று நாகை மாவட்டத்திற்குட்பட்ட தெத்தி ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் ரியாஸ் மற்றும் திரளான இளைஞர்களும், மாணவர்களும் மஜக வில் இணைந்துள்ளனர்.

அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், MJTS தலைவர் நாகூர் ஜாஹிர், நாகூர் நகர பொருளாளர் சாகுல், துணை செயலாளர் அரபாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.