மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!


செங்கை.அக்:10

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் 09.10.202 அன்று மாலை மாவட்டத் துணைச் செயலாளர் அனகை அப்துல்லாஹ் தலைமையிலும், ஆலந்தூர் சலீம், A.J.சாதிக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில இளைஞரணி செயலாளர் A.அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் S.பஷீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், சமீப நாட்களாக நாட்டில் நடந்தேறி வரும் அநீதிகளுக்கு எதிராக மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
09-10-2020