திருப்பந்துருத்தியில் மஜக கொடியேற்றும் நிகழ்வு! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


அக். 11,
தஞ்சை மாநகர் மாவட்டம் திருப்பந்துருத்தியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஏற்றி வைத்தார்.
அப்போது மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் முழக்கங்களை எழுப்பினார்.

பின்னர் அவ்வூர் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத்தின் சார்பில் வரவேற்புடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜமாத் தலைவர் ஹாஜி K.T.A ஜாகிர் உசேன் தலைமை ஏற்க, ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் வகித்தனர்.

இதில் பொதுச் செயலாளர் அவர்கள் கொரோன தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிறகு,கேள்வி-பதில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் எல்லோரும் தேர்தல் அரசியலில் ஒன்று படுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மனிதநேய ஜனநாயக கட்சி, சமூக நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய கட்சியினருடன் நாங்கள் எப்போதும் ஒன்றுபட்டு நிற்போம் என பதிலளித்தார்.

நிறைவாக ஜமாத் பிரமுகர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். தாங்கள் ஊருக்கு ஜும்மா சிறப்புரை ஆற்ற வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அகமது கபீர், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், திருப்பந்துருத்தி நகர செயலாளர் முகம்மது காலித், முகம்மது பந்தர் நகர செயலாளர் ஜாபர் அலி, கண்டியூர் நகர செயலாளர் முபாரக் அலி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மஹ்ருப், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.