மஜக குமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு!!


நாகர்கோவில்
செப். 27,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் இன்று நாகர்கோவில் எஸ் ஜி எஸ் லாட்ஜ் ஹாலில் வைத்து நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்து ஒரு வார காலத்திற்கு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், மாநகர செயலாளர்கள் ஹிஜாஸ், அஷ்ரப் அலி, மாநகர இளைஞரணி செயலாளர் சமீர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
26.09.2020