நாகர்கோவிலில் உகாசேவா டிரஸ்ட் மருத்துவமனையை! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பார்வையிட்டார்!


நாகர்கோவில்
செப்.27.,

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் நாகர்கோவில் மாநகரம் கோட்டாரில் அமைந்துள்ள உகாசேவா டிரஸ்ட் மூலம் நடந்து வரும் மருத்துவமனையை அதன் நிர்வாகிகளின் வேண்டுகோளின்படி பார்வையிட்டார்.

மாநில பொருளாளர், அவர்களுக்கு உகாசேவா நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகி நயீம், அவர்களுடன் மருத்துவமனையை பார்வையிட்ட மாநில பொருளாளர் உகாசேவா மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில்,மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், நகர துணைச்செயலாளர் அஷ்ரப் அலி, மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
26.09.2020