குடந்தையில் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டம். மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு!

செப்.24,
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் வேளாண் மசோதா நகல் எரிக்கும் போராட்டம் இன்று குடந்தையில் நடைப்பெற்றது.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மஜக சார்பாக, மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, சையது இப்ராஹிம், அணி செயலாளர்கள் உபைஸ் கரீம், முஹம்மது அலி, சாஜித், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி உள்பட மஜகவினர் திரளான கலந்துக் கொண்டனர்.

முன்னதாக, விவசாய சட்ட மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக சார்பில் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.