வேலூரில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!

வேலூர்:செப்.19.,

வேலூர் CMC மருத்துவமனையில் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் இறந்ததாகவும், அவரை தாங்கள் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் மஜக வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
18.09.2020