பெரம்பலூரில் மத்திய பாஜக அரசுக்கெதிராக விவசாயிகள் போராட்டம் மஜக பங்கேற்பு!


செப். 11,

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான விவசாயத்தை அழிக்கின்ற அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்டத்தில் கிசான் நிதியுதவி திட்டத்தில் பலகோடிகள் முறைகேடு நடைப்பெற்றதைக் கண்டித்தும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு வந்திருந்த அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது. தமிழகமெங்கும் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தபால் மூலம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்.