கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கிருமிநாசினி தெளித்து துண்டு பிரசுரம் வழங்கிய மஜகவினர்!!


தென்காசி : செப் 06.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், அவர்களின் தலைமையில் தென்காசி நகரம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கிருமி நாசினி தெளித்தனர்.

இதில் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்ட சாகுல், மாவ‌ட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மாணவர் இந்தியா செயலாளர் முஸ்தபா, நகர பொருளாளர் முகம்மது கனி, துணை செயலாளர் சேக் அலி, தொழிற்சங்க செயலாளர் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆம்ஷா பாசித், நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக், துணை செயலாளர் உமர் அலி, 10 வது வார்டு செயலாளர் பாசித் அஸாருதீன், 10 வது வார்டு மாணவ‌ர் இந்தியா செயலாளர் ரஷீத் அலி,
ஆகியோர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
06.09.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.