பட்டுக்கோட்டை வணிகர் சலீம் மரணம் குறித்த சந்தேகங்கள்!உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உறுதி!

செப் :1„

பட்டுக்கோட்டை வணிகர் சலீம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

நேற்று அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து முறையிட்டனர்.

அவர் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பிறகு மாவட்ட SP சஞ்சய் சேகரிடமும் பேசினார்.

பிறகு அக்குடும்பத்தினரிடம் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், இது குறித்து முதல்வர் அலுவலக கவனத்திற்கும் எடுத்து செல்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க மஜக துணை நிற்கும் என்றும் கூறினார்.

அப்போது துணை பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
31.08.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.