முன்னாள் ஜனாதிபதி பிரணாப்_முகர்ஜி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வழியாக நாட்டுக்கு அறிமுகமான அவர், இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், வங்க மக்களின் பெருமைக்குரிய ஆளுமைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

அவரின் மறைவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
31.08.2020