தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கடந்த ஜீன் 4 , 2020 அன்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா தொற்றின் காரணமாக தேர்வு கட்டணம் செலுத்துவது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 26 அன்று முதல்வர் அவர்கள் “அரியர் தேர்வு கட்டணம்” செலுத்தியவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்துள்ளது கவனிக்கத்தக்கது.

கொரோனா பேரிடர் காரணமாக ஏராளமான மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்துள்ளனர்.

இதனால் பல கல்லூரிகள் தங்களை வழி நடத்தும் பல்கலை க்கழகங்களில் கட்டணம் செலுத்தவில்லை.

இவ்விஷயத்தில் போக்குவரத்து இன்மை, வாழ்வாதார இழப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

எனவே தேர்வு கட்டணம் செலுத்தாத அனைத்து பொறியியல், கலை, பாலி டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் இதே போன்ற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
31.08. 2020