You are here

திருவாரூரில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மஜக நடத்திய இரயில் மறியல்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!


ஜன.27,

டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகளில் மத்திய மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை ரவுண்டானா வழியாக இரயில் நிலையத்தை மஜகவினர் வந்தடைந்தனர்.

பின்னர் முழக்கங்களை எழுப்பியவாறு கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயிலை மறிக்க முயன்ற மஜக வினர் காவலர்களால் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.

இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் நாகை முபாரக் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

கண்டன முழக்கங்களை அத்திகடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், கட்டிமேடு ஆதிரெங்கம், நாச்சிகுளம், பாமணி, கொடிக்கால்பாளையம் கிளை செயலாளர்கள் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லா முன்னிலை வகிக்க, மாவட்ட விவசாய அணி செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர, கிளை மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.