மலேசியாவில் சாலை விபத்தில் பலியானவர் உடலை அடக்கம் செய்த மஜகவினர்.!


மலேசியா.ஆக.22.,

மலேசியாவில் ஜொஹர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் பலியானார்.

அவரது உடலை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு அவரது உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ரியாஸ் அவர்களிடம் கோரினர்.

அதனடிப்படையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மஜக சார்பு அமைப்பான ஜொஹர் மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக பீக்கர் அலி, அட்டாக் சுல்தான், அமீனுதீன், சாகுல், உள்ளிட்ட MKP-யினர் முன்னின்று நேற்று இரவு ஜொஹர் அடக்கத்தலத்தில் அவரது உடலை சட்ட ரீதியாக அடக்கம் செய்தனர்.

தாயகத்தில் உள்ள அவரது உறவினர் நஸீர், இதற்காக மஜக-வுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்து கொண்டார்.

தகவல்,
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை,
#தகவல்_தொழில்நுட்ப_அணி,
ஜொஹர் – மலேஷியா
21-08-2020