வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கம்.. மஜக நெல்லை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள்.!


நெல்லை.ஆக. 21.,

கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர், மேலும் சிறு குறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

இதனால் மத்திய அரசு அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி “தமிழ்நாடு அலையன்ஸ்” சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த 14-ஆம் தேதி துவங்கியது, இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அறிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா, முன்னால் மாவட்டச் செயலாளர் இக்பால், மாவட்ட MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான், வான்முகில் டிரஸ்ட் மதியழகன், சகோதரி மாரியம்மாள், மஜக மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் தமீம் அன்சாரி, மேலப்பாளைய நகர MJTS செயலாளர் A1 மைதீன், பேட்டை நகர துணை செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், பேட்டை நகர MJTS செயலாளர் ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.

பொதுமக்கள் பரவலாக ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு, தங்களுக்காக நடைபெறும் இக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் சகோதர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மஜக மாவட்டச்செயலாளர் அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெறும் இக் கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கையை மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் கொண்டு சென்று கையெழுத்து பெறுவோம் என்று தெரிவித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
21-08-2020