கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கபசுர குடிநீர் வழங்கிய மஜகவினர்!

தென்காசி:ஆக.06.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர்.

அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளையின் சார்பில் கொரோனா நோய் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம் வடகரை பேரூர் கிளை செயலாளர் S.Mமுகம்மது இல்யாஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தென்காசி மாவ‌ட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் M.முகம்மதுபஷீர், வடகரை பேரூர் கிளை துணை செயலாளர்கள் K. அமானுல்லா, K. செய்யது அலி, இளைஞரணி செயலாளர் M.முகம்மது அசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.நவாப் சர்புதீன், மற்றும் அச்சன் புதூர் கிளை பொருளாளர் கமால்தீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
05.08.2020