இரவு பகலாக சேவை செய்து வரும் மஜக விமானநிலைய சேவைக்குழு.!


திருச்சி.ஆகஸ்ட்.08.,

வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நள்ளிரவில் துளசியாப்பட்டினத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்கும்படி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் திருச்சி மாவட்டச்செயலாளரிடம் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விமான நிலையம் சென்ற மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் விமான நிலையம் வந்திறங்கிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் வந்த மற்றொரு விமானத்தில் வருகை தந்த ஷார்ஜாவை சேர்ந்தவர்கள், மஜக-வின் பணிகளை முகநூல் வாயிலாக அறிந்து திருச்சி மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினர், அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.

மேலும் அதே விமானத்தில் வந்திறங்கிய மாயவரம் மற்றும் சிதம்பத்தை சேர்ந்த இருவர் விமான நிலையத்தில் பணம் இல்லாமல் தவித்து வந்தனர். அவர்களையும் மீட்டு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களின் சொந்த ஊர்களில் தனிமைபடுத்த ஏற்பாடு செய்து செய்து மஜக-வினர் அனுப்பிவைத்தனர்.

இப்பணியில் மாவட்டச் செயலாளர் பாபுபாய் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் பகுருதீன், ஜமாலுதீன், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் காதர் ஆகியோர் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
05-08-2020