முன்னாள் அமைச்சர் தலித் எழில்மலை மறைவு! முதமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

பாமக-வின் முதல் பொதுச் செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய ஐயா. தலித் எழில்மலை அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

சமூக நீதிக்கான போராட்டங்களில் போர் குரலாய் எதிரொலித்த அவர், தலித் மக்களிடமிருந்து நிறைய ஆளுமைகள் உருவாக வழிகாட்டியாக இருந்தார்.

1990-களில், மருத்துவர் ராமதாஸ் ஐயா, மருத்துவர் சேப்பன் ஐயா, ஷஹீத் பழனிபாபா, பேராசிரியர் தீரன் ஆகியோருடன் அவர் இணைந்து ஆற்றிய சமூக நீதி பணிகள் சிறப்பானவை.

சட்டமன்ற நிகழ்வுகளில் எனது செயல்பாடுகளை கவனித்து, அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்துவார்.

எல்லோரோடும் கருத்துகளையும், கொள்கைகளையும் சகஜமாக பகிர்ந்துக் கொள்ளக் கூடிய ஒரு எளிமையான தலைவராக வாழ்ந்து வந்தார்.

விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்ட அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
06.05.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.