டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்தி சார்ஆட்சியரிடம் மஜக மனு!


பொள்ளாச்சி:மே.06

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 41நாட்கள் கழித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை 7ஆம் தேதி முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் பெரிதும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

நோய் தொற்று சமூக பரவலாக மாற இதுவே காரணமாகிவிடும் எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, அவர்கள் தலைமையில் சார் ஆட்சியரிடம் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இதில் நகர பொருளாளர் முகமது பஷீர், நகர துணை செயலாளர்கள் அன்சார், அப்துல்காதர், நகர இளைஞர் அணி செயலாளர்அலாவுதீன்,இளைஞர் அணி பொருளாளர் முகமது இஸ்மாயில், இளைஞர் அணி துணை செயலாளர் செளக்கத் அலி, முன்னால் நகர பொறுப்பாளர் அப்பாஸ், மற்றும் 26வது வார்டு பொறுப்பாளர் முபாரக், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
06.05.2020