வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழக மக்களை உடனே மீட்க வேண்டும் : தமிழகமுதல்வருக்கு முதமிமுன் அன்சாரி MLA கடிதம்

தமிழக முதல்வருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது….

கொரணா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் தவிப்பவர்களை அவரவர் மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டு, மாநிலங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தப்லீக் ஆன்மீக பயணிகள், யாத்ரீகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும் டெல்லி, உ.பி, ம.பி, மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் கடந்த 37 நாட்களுக்கும் மேலாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை சிறப்பு பேருந்துகள் மூலம் மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அது போல் தமிழகத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே முடங்கியிருப்பவர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்ல, 48 மணி நேர போக்குவரத்து தளர்வையும் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.
30/04/2020