தலைமை செயலகத்தில் தலைவர்கள் சந்திப்பு..! மஜகசார்பில்அவைத்தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!!

சென்னை.மார்ச்.14.,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில்.

தமிழக அரசு சார்பாக இன்று மாலை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் கட்சிகள் மற்றும் அமைப்பினரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அவைத்தலைவர் நாசர் உமரி தலைமையில் துணைப் பொதுச் செயலாளர்கள் சுல்தான் அமீர் மற்றும் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்கள்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#சென்னை.
14-03-2020