திருப்பூர் ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!


திருப்பூர்: மார்ச்.10.,

திருப்பூரில் குடியுரிமை தொடர்பான CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 24 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் தொடர்தர்ணா போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது தமிழகத்தில் வண்ணாரப் பேட்டையில் வன்முறையை நிகழ்த்திய அடுத்த நாள் முதல் நடைபெறும் திருப்பூர் ஷாகின்பாக் என்ற தொடர் தர்ணா எனும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டி ருக்கின்ற திருப்பூர் வாழ் பொதுமக்கள் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள்.

மற்ற ஊர்களை காட்டிலும்
திருப்பூரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தொடர்ந்து இந்த போராட்டத்தை வலிமைப்படுத்தி வருகின்றீர்கள் என பெண்களை பாராட்டி பேசினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் ஆசீக், மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அஸ்கர், துணைச் செயலாளர்கள் அபுதாகிர், யாக்கூப், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அபு,மாவட்ட பொருளாளர் சேக் ஒலி,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் காதர்கான், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
09.03.2020