நாகூரில் குடியுரிமைக்கு சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டனப்பொதுக்கூட்டம்! மஜக பங்கேற்பு!!

பிப்.24,
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களின் தொடர்ச்சியாக நாகூர் மக்கள் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று மாலை நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

பல்வேறு சமூக, அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மஜக சார்பில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் கலந்து கொண்டு குடியுரிமை சட்டங்களுக்கெதிராக தன்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்தார்.

இதில் மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மா.து.செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் தெத்தி.ஆரிப், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், நகர செயலாளர்கள் அபுசாலி சாஹிப், அஜுஜூர் ரஹ்மான், நாகை ஒன்றிய து.செயலாளர் சதாம், நாகூர் சாகுல், மஹ்மூது இபுராகிம், ஷேக் அலி, அப்துல் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

மேலும், நாகூர் மக்கள் கூட்டமைப்பில் பள்ளிவாசல் மற்றும் இயக்க, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாகூர் நகர மஜகவினரும் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.