CAA, NRC,NPR சட்டங்களுக்கு எதிராக காங்கேயம் மஜக முன்னெடுத்த தர்ணா போராட்டம்.!

பிப்.19.,

திருப்பூர் மாவட்டம். காங்கேயம் நகரில் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக காங்கேயம் நகரில் மஜக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

போராட்டம் அறிவிப்பு செய்யப்பட்டவுடன்
காவல்துறை தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது .

அச்சுறுத்தல்களையும் மீறி தடைகளை உடைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டத்திற்கு
காங்கேயம் நகர செயலாளர் அபுதாகிர், அவர்கள் தலைமை தாங்கினார்.

நகர பொருளார் அப்பாஸ், வரவேற்புரை யாற்றினார்.

போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வ புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கன்னுசாமி, கவி விடியல், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக கண்டன உரையாற்றிய மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர்கள்
முஜிபுர் ரகுமான், ராயல் பாட்சா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நகர துணைச் செயலாளர் ஜெய்லானி அவர்களின் நன்றியுரையுடன் தர்ணா போராட்டம் நிறைவுபெற்றது.

காங்கேயத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்.
18-02-2020

Top