ஜனவரி26 ,சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்போம்..! மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை..!

சமீப காலமாக நமது நாட்டு ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான அரசியல் சாசன சட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையும், உரிமையுமாகும்.

அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி-26 குடியரசு தினத்தன்று “சட்ட பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றல்” நிகழ்வை தேசிய கொடியை ஏற்றி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முன்னெடுப்பது என இன்று கூடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இதை பிற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொது நல அமைப்புகள், ஜமாத்துகள், கிராம பஞ்சாயத்தினர் என அனைவரும் ஆதரித்து இதனை செயல்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
23.01.2020