மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்..! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!

சென்னை.டிச.09..,

மேட்டுப்பாளையத்தில் ஆதிக்க சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், அதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், பெரியாரிய-தமிழின உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஐயா.நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே-17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கு.ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, விசிக சார்பில் ஷாநவாஸ், விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் குடந்தை அரசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

சுவர் உரிமையாளர் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும், நீதி கேட்டு போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும், அராஜகம் செய்த ஈரோடு Sp, மேட்டுப்பாளையம் DSP, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது தீண்டாமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டது.

இதில் மஜக மாநில துணைச் செயலாளர் ஷமீம், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் மீரான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மி உள்ளிட்ட மஜக-வினரும் பொதுச் செயலாளருடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மேற்கு_மாவட்டம்
09-12-2019

https://m.facebook.com/story.php?story_fbid=2145066115593152&id=700424783390633