மஜக சார்பில் சுதந்திரதின கொடியேற்று நிகழ்ச்சி..! மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் பங்கேற்பு..!!

வேலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கௌஸ் குஸ்ரு மொஹிதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

காலை 8.00 மணியளவில் 1வது வார்டு கிளையின் சார்பாகவும், தேசிய கொடியை மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் S G அப்சர் சையத் ஏற்றி வைத்தார், காலை 9.00 மணியளவில் 31 வது வார்டு சைதாப்பேட்டையில் தேசிய கொடியை மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் உசேன் ஏற்றி வைத்தார், காலை 09.30 மணியளவில் 56 வது வார்டு கொணவட்டத்தில் தேசிய கொடியை மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் ஏற்றிவைத்தார், காலை 10.00 மணியளவில் R.N.பாளையம் 53வது வார்டு கிளையின் சார்பாக, 2 இடங்களில் தேசிய கொடியை மாவட்ட மனிதஉரிமை அணி செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களும் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமீல் அவர்களும் ஏற்றினர்.

பிறகு 53வது வார்டு பகுதியில் மரக்கன்றுகளை மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் உசேன் நட்டார். மஜகவின் வாழ்த்து முழக்கத்தை மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன் கூறினார். பிறகு இனிப்பு வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர் மாவட்ட வர்த்தகர் அணி து. செயலாளர் சர்வர்,இளைஞர் அணி து. செயலாளர் சாதிக், 3ம் மண்டல து.செயலாளர்கள் அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ், காதர் மற்றும் 1வது வார்டு, 30வது வார்டு, 31 வது வார்டு ,53வது வார்டு, 56வது வார்டு கிளைகளின் நிர்வாகிகள், மற்றும் பல பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
15.08.2018