நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!

நாகை. ஜூலை.27., இன்று, நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , திருமருகலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், வடகரை ஊராட்சி திருப்பனையூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடம், திருமருகல் ஒன்றியம் சேஷமூலை கிராமத்தில் கட்ப்பட்ட குழந்தைகளுக்கான புதிய அங்கன் வாடி கட்டிடம் ஆகிய ஐந்து கட்டிடங்களை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு O.S மணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா நினைவாக அனைத்து கட்டிட திறப்பு நிகழ்வுகளிலும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுளை நட்டனர்.

நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுத்து பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்கள்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
27.07.2018