மனிதநேய ஜனநாயக கட்சியின் கோட்டைப்பட்டினம் கிளை உதயம்…

image

நவ.28., புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் K.ராவுத்தர் ஷா அவர்கள் தலைமையேற்க்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ்  மற்றும் அரசை செய்யது அபுதாகிர், அறந்தாங்கி முபாரக், சேக் ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளை செயலாளர் : F.சேக் தாவூத்,

கிளைப் பொருளாளர் : T.தாஜுதீன்,

கிளைச் செயலாளர் : J.முஜிபு ரஹ்மான்,

மருத்துவ அணிச் செயலாளர் : ராஜா முஹம்மது ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

மேலும் மஜக தலைமை அறிவித்துள்ள டிசம்பர்-6 புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக அதிகமானவர்களை அழைத்துச் செல்வதென தீர்மானம் நிறைவேற்றி நிகழ்வு நிறைவுபெற்றது.

தகவல் : மஜக ஊடகபிரிவு, புதுக்கோட்டை மாவட்டம்.