நாகை அருகே பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!

image

நாகப்பட்டினம் பொரவச்சேரி அருகே ஆந்தங்குடியில் இருந்து நாகை நோக்கி வந்த
அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் +2 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 34 பேர் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இறந்த மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறி, பிறகு அங்கு வந்த கலெக்டரிடம் உரிய இழப்பீடு தொகை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.