பட்டுக்கோட்டை மற்றும் ஆவணம் ஜமாத்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர்!

image

கடந்த 14.10.2016 அன்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை பெரிய பள்ளியில் ஜமாத் சார்பில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது.

முன்னதாக ஆவணத்தில் பொதுச்செயலாளருக்கு ஆவணம் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது அவ்வூரில் சமுதாயத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று, அப்பணியை மஜக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜமாத்தினர் கேட்டுக் கொண்டனர்.

அதுகுறித்து விரைவில் இருதரப்பிலும் பேசி, கண்ணியமான முறையில் சுமுகத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என பொதுச்செயலாளர் கூறினார்.

அதன்பிறகு அவ்வூரில் TNTJ மர்கஸுக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிவிட்டு புறப்பட்டார்.

தகவல்; மஜக ஊடகப் பிரிவு(தஞ்சை தெற்கு)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.