இன்று மஜக சார்பில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் அருகில் குழுமினர். பெரும் திரளானோர் கூடிய நிலையில், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, SDPI சார்பில் அமீர் ஹம்சா, INTJ சார்பில் முனீர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் சார்பில் தலைவர் அ.ச. உமர் பாரூக், இந்திய தேசிய லீக் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன், பேரா. அ. மார்க்ஸ், இயக்குனர் கெளதமன், மே 17 இயக்கம் சார்பில் பிரவீன் குமார், மறுமலர்ச்சி தமுமுக சார்பில் தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தனர். முழக்கங்களை எழுப்பிய மக்கள் திடீர் ஆவேசம் அடைந்து, மாநில செயலாளர் சகோ. தைமிய்யா தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். காவல்துறையின் தடுப்புகளை உடைத்து மஜகவினர் ஆவேசத்துடன் நுழைந்தனர். மற்றவர்கள் தடுக்கப்பட்ட நிலையில், உள்ளே புகுந்த மஜகவினர் குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். கூட்டம் தொடர்ந்து முன்னறியதும் அனைவரும் வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.
தமிழகம்
தமிழகம்
மஜகவின் இரயில் மறியல் போராட்டம் கைப் பதாகைகள் மாதிரிகள்
இரயில் மறியல் போராட்ட கள விபரம்…
தமிழக அரசின் பட்ஜெட் ஒரு பூமாலை…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA வெளியிடும் அறிக்கை ) தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு நிதி அமைச்சர் O.பன்னீர் செல்வம் அவர்கள் 2016 – 17 ஆம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையை சமர்பித்திருக்கிறார் . மாண்புமிகு முதல்வர் டாக்டர் . அம்மா அவர்களின் மக்கள் நல சிந்தனைகளையும் , தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை சிறப்பாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. • உள்ளாட்சி அமைப்புகளுக்கு 11,514,34 கோடி ஒதுக்கீடு. • மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக மக்கள் நலவாழ்வுத் துறைக்கு 9.073 கோடி ஒதுக்கீடு. • உயர் கல்வித்துறைக்கு 3,679.01 கோடி ஒதுக்கீடு. • பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டுதல் 420 கோடி ஒதுக்கீடு. https://m.facebook.com/needhiyinpakkam/ • ஊரக வளர்ச்சி துறைக்கான பணிகளுக்காக 21,186.58 கோடி ஒதுக்கீடு. • போக்குவரத்து துறை மேம்பாட்டிற்காக 1295.08 கோடி ஒதுக்கீடு. • நீர் மேலாண்மையை செம்மைபடுத்தும் வகையில் நீர்வள ஆதாரத்துறைக்கு 3,406.69 கோடி ஒதுக்கீடு. • தமிழ்மொழி வளர்ச்சி துறைக்கு 32.94 கோடி ஒதுக்கீடு. • உலமாக்கள் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்துதல். • விவசாயிகளுக்கு 2016 – 17 ஆம்
மஜக பெருளாளர் S.S.ஹாரூன் ரசிது அவர்களுக்கு நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் மக்கள் சேவை விருது.
மஜக பெருளாளர் S.S.ஹாரூன் ரசிது அவர்களுக்கு நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் மக்கள் சேவை விருது வழங்கி கெளவரவித்தது. நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது, மாநில செயல்குழூ உறுப்பினர் ஷாஜஹான், கடலூர்(வடக்கு) மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு கடலூர் (வடக்கு)