சென்னை.ஜூலை.06., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் "தமிழகத்துக்கு விலக்கு கேட்டு" நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' என்ற அமைப்பு சார்பில் தோழர்.பிரிண்ஸ் கஜேந்திரபாபு உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். அதில் CPM சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, திமுக சார்பில் R.S.பாரதி M.P, விசிக சார்பில் தொல்.திருமாவளவன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, காங்கிரஸ் சார்பில் ஹிதாயத்துல்லாஹ், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் நாங்கள் மூவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூறினர். சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வு குறித்து தான் இரண்டு முறை பேசியதாக தமிமுன் அன்சாரி அங்கு நினைவு கூர்ந்தார். முன்னதாக மேற்கண்ட தலைவர்கள் ஒன்றாக நின்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை. 06.07.17
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகப் படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) யூனியன் அந்தஸ்து பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் அரசியல் குழப்பங்கள் நாட்டையே அதிர்சியில் ஆழ்த்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செய்து வரும் நடவடிக்கைகள் கடும் கண்டணத்திற்குரியதாகும். பச்சையாக சொன்னால் மத்திய அரசின் துணையோடு அரசியல் ரவுடித்தனங்களை அவர் அரங்கேற்றி வருகிறார் என்பதுதான் உண்மையாகும். மத்திய அரசு, இரட்டை தலைமைத்துவத்தை உருவாக்கி ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்பது ஜனநாயக படுகொலையாகும். உச்சகட்டமாக அங்கு மத்திய அரசு மூன்று பேரை நியமன உறுப்பினர்களாக மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததும், அதற்கு ஆதரவாக கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பதும் புதுச்சேரி மாநில மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் சர்வாதிகார போக்குகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் உரிமைகளையும் அழிக்க நினைப்பது இந்திய அரசியலை சீர்குலைக்கும் போக்கு என்பதில் ஐயமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் அத்துமீறல்களுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும்,
நூறு ஆண்டுகளுக்கு பிறகு புத்தூர் தாமரை குளம் தூர்வாரும் பணிகள் துவக்கம் ! நாகை MLA பார்வையிட்டார் !
நாகை தொகுதிக்குட்பட்ட புத்தூர் தாமரை குளம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. இதில் சர்ச்சைகள் இருந்ததை அறிந்த MLA அவர்கள் ஊர் மக்களை அழைத்து சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். தற்போது ஊர் மக்கள் ஒத்துழைப்போடு 2 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம் நுாற்றாண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவாதல், மக்கள் MLA வுக்கு நன்றி கூறினர். இக்குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பும்போது, 2 ஆயிரம் மக்கள் தினமும் பயனடைவார்கள். தினமும் 15 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். மேலும் மக்கள் குளிப்பதற்கு , வீட்டு தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு என இக்குளம் சேவையாற்றும் என்பது குறிப்பிடதக்கது. M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகளை நிறைவடைய செய்ய வேண்டும் என்றும், தனது முயற்சியால் படித்துறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். தகவல் நாகை சட்டமன்ற அலுவலகம் 05.07.2017
பிரமாண்ட இறகுபந்து நிலையம் திறப்பு! அன்புமணி ராமதாஸ், தமிமுன் அன்சாரி, ரமேஷ் அரவிந்தன் திறந்து வைத்தனர்.
காஞ்சி.ஜூலை.04., சென்னை அருகே சோழிங்கநல்லூரில் OMR பேட்மிண்டன் அகாடமி சார்பில் பிரமாண்ட இறகுப்பந்தாட்ட நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் ஆடுகளத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களும், இரண்டாவது ஆடுகளத்தை M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மூன்றாவது ஆடுகளத்தை சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் MLA அவர்களும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மஜக பொருளாலர் ஹாருன் ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா.நாசர், மாநில செயலாளர் தைமிய்யா, அதிமுக பிரமுகர் முஸ்தபா, இறகுபந்தாட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ECR மற்றும் OMR சாலையில் இருக்கும் புறநகர் மக்களுக்கு இந்த ஆடுகளம் பெரும் பொழுதுபோக்கு மையமாக திகழும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. அப்பாஸ், ரிபாயி, தஸ்லீம் ஆகியோர் இணைந்து இதை அமைத்துள்ளனர். அவர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. (#MJK_IT_WING) காஞ்சி மாவட்டம். 04.07.2017
நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத் தாருங்கள்! சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!
(04/06/2017 செவ்வாய் அன்று தமிழக சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் 'தகவல் கோரலின்' கீழ் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை) மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே.... நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த IND-TN-06-MM-523 எண் கொண்ட விசைப்படகில் 24-06-2017 அன்று 8 மீனவர்களும் புறப்பட்டனர். 24-06-2017 அன்று கோடியக்கரைக்கு நேர்கிழக்கே 33 நாட்டிகல் மைல் தொலைவில் நமது இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.முவிஷ் 2.செல்வம் 3.ராஜசேகர் 4.ரமேஷ் 5.சக்திவேல் 6.செந்தில் 7.வினோத் 8.சங்கர் ஆகிய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுவதால், அவர்களது குடும்பங்களும் கஷ்டத்தில் தவிக்கின்றன. அந்த மீன்பிடி படகின் விலை 66 லட்சமாகும். அதில் உள்ள பொருட்களின் மதிப்பு 12 லட்சமாகும். அதுபோல எனது நாகை தொகுதிக்கு உட்பட்ட நம்பியார் நகரை சேர்ந்த சத்யன், N.சங்கர், P.செல்லக்கண்ணு, விஜயவேல் ஆகியோருக்கு சொந்தமான நான்கு விசைப்படகுகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவருக்கும் படகுகளை மீட்டுத்தர வேண்டும். 100 சதவீத மானியத்தில் இவர்களுக்கு படகுகளை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் 135 படகுகள் இலங்கை