ஆக.15., கோவையில் இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் மஜக கொள்கைப் பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
Author: admin
ஜமாத்துல் உலமா தீர்மானத்தை சட்டசபைக்கு கொண்டு சென்ற மஜக.
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA அவர்களும், மஜக பொதுச்செயளாலர் தமிமுன் அன்சாரி MLA அவர்களும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சிலை வைத்தது குறித்து ஆட்சேபனை தெரிவித்து கருத்து கூறினார்கள். அபுபக்கரின் கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் மணிகண்டன் அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்றார். அதற்கு தனது உரையில் பதில் சொன்ன மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அப்துல் கலாம் பெயரில் விருதுகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரின் பெயரில் மத்திய அரசு சிலை வைப்பதை ஏற்க முடியாது என்றார். இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை என்றார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் , இதை பொது விவாதமாக மாற்ற வேண்டாமே என்றார். அதற்கு பதில் அளித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "முஸ்லிம்களின் தாய் அமைப்பான ஜமாத்துல் உலமா இதற்கு மாற்று கருத்தினை முன் வைத்துள்ளது" என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார். ஜமாத்துல் உலமா அப்துல் கலாமுக்கு மத்திய அரசு ராமேஸ்வரத்தில் சிலை வைத்ததை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது
70-வது சுதந்திர தின வாழ்த்து : பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது கடமை.
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நமது மகிழ்ச்சிக்குரிய ஆகஸ்ட் 15 ம் நாள் மீண்டும் வந்திருக்கிறது. நீண்ட வரலாற்றையும்,தொண்மையான கலாச்சாரத்தையும் கொண்ட நம் இந்திய திருநாடு 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கொள்கையோடு பயணிக்கிறது. நாம்,சுதந்திரத்தின் தென்றலை கடந்த 70 ஆண்டு காலமாக அனுபவிக்கிறோம் எனில், அதற்கு நமது முன்னோர்கள் செய்திட்ட அரும்பெரும் தியாகங்கள்தான் காரணமாகும். ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற போர்களும்,போராட்டங்களும் வரலாற்றில் ஈரம் காயாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கேரளத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி வைத்த வீரப்போர் காந்தியடிகளின் தலைமையில்,நேரு,அபுல்கலாம் ஆசாத் போன்றோர் முயற்சிகளில் விடுதலையாக மலர்ந்தது. ஹைதர் அலி,திப்பு சுல்தான்,ஜான்சிராணி லட்சுமி பாய்,தாந்தியா தோபே,இரண்டாம் பகதூர்ஷா,சிராஜுத் தௌலா போன்ற தேசியத்தலைவர்களும், தமிழகத்தில் பூலித்தேவன்,தீரன் சின்னமலை,மருதநாயகம் என்னும் யூசுப்கான்,கட்டபொம்மன்,வீரன் சுந்தரலிங்கம் போன்ற நாயகர்கள் முன்னெடுத்த சுதந்திர போர்கள் சிலிர்ப்பூட்டக்கூடியவை. இதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய நவீன சுதந்திர போர் ஒரு தனி வரலாறாகும். நாம் 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நமது முன்னோர்களின் தியாகங்களை போற்றுவோம் ! அவர்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது இன்றைய கடமை என்பதை உணர்வோம். மதவாத அச்சுறுத்தல்,சாதிய மேலாதிக்கம், பயங்கரவாதம்,ஊழல்,பன்னாட்டு மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக
விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மஜக சார்பில் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா பங்கேற்பு…
ஆக.13., இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். தகவல் : மஜக ஊடகபிரிவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா…
ஆகஸ்ட்-15 இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா