ஏப்.19., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியின் மனித நேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் M. தமிமுன் அன்சாரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஒரே நாளில் 25 கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஒரே நாளில் அதிரடியாக மஐகவினர் திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 25 கிராமங்களுக்கு சென்று சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றியதை பார்த்த அதிமுக தோழர்கள் ,ஒரு பெரிய அரசியல் கட்சிக்கு இணையாக பணிபுரிகிறீர்களே என பாராட்டினார்கள். செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்கள் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு வரவேற்பு கொடுத்ததோடு ஒரு துடிப்பான இளைஞர் வேட்பாளராக வலம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்கள். கோவில்கள் பள்ளிவாசல்களில் அங்குள்ள நிர்வாகங்களின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தமீமுன் அன்சாரியின் அணுகுமுறைகள் குறித்து நல்ல அபிப்ராயம் உருவாகி வருவது குறிப்பிடதக்கது. தகவல் : மஜக ஊடகப் பிரிவு
Author: admin
ஒட்டன்சத்திரம் தொகுதியின் மஜக வெற்றி வேட்ப்பாளர் ஹாரூன் ரஷீத் அவர்கள் பரப்புரை…
நாகை தொகுதியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி வாக்கு சேகரித்த காட்சி
ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளை கூட்டம்…!!!
இன்று 18.04.2016 காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்து தந்தனர்... எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து எங்கள் கூட்டணியை வெற்றி பெற கடுமையாக உழைப்பை செய்வோம் என்றும். அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சோழபுரம் இளைஞர் பட்டாளம் முழு ஆதரவு தருவோம் என்றும். உறுதி அளித்தனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு தஞ்சை வடக்கு