நாகை தொகுதியில் ஒரே நாளில் 25 கிராமங்களில் பரப்புரை !!

ஏப்.19., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியின் மனித நேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் M. தமிமுன் அன்சாரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஒரே நாளில் 25 கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஒரே நாளில் அதிரடியாக மஐகவினர் திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 25 கிராமங்களுக்கு சென்று சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றியதை பார்த்த அதிமுக தோழர்கள் ,ஒரு பெரிய அரசியல் கட்சிக்கு இணையாக பணிபுரிகிறீர்களே என பாராட்டினார்கள்.

செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்கள் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு வரவேற்பு கொடுத்ததோடு ஒரு துடிப்பான இளைஞர் வேட்பாளராக வலம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்கள்.

கோவில்கள் பள்ளிவாசல்களில் அங்குள்ள நிர்வாகங்களின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது.

எல்லா இடங்களிலும் தமீமுன் அன்சாரியின் அணுகுமுறைகள் குறித்து நல்ல அபிப்ராயம் உருவாகி வருவது குறிப்பிடதக்கது.

தகவல் : மஜக ஊடகப் பிரிவு