மஜக விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

விருதுநகர்.ஜன.18., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் விருதுநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று விருதுநகரில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் , இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் J.S.ரிஃபாய், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி S.செய்யது அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கன்மணி காதர், மாவட்டப் பொருளாளர் S.பாதுஷா மற்றும் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் A. அகமது ராஜா மற்றும் இராஜை கிளை  நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாவட்த்தின் அனைத்து பகுதிகளிலும் கிளைகளை உருவாக்குவது, பிப்ரவரி 18 அன்று பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விருதுநகர்_மாவட்டம்