ஞானி மரணம்! மஜக இரங்கல்..!!

image

(மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை..)

தமிழ்நாட்டின் அறிவு ஜீவிகளில் ஒருவராகவும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்த #ஞானி அவர்கள் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

கடந்த ஜனவரி 11 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்து உரையாடினேன்.ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் அவரை நான் சந்திப்பதுண்டு ஆனால் அன்றைய தினம் அவர் மிக சோர்வாக இருந்ததை கண்டேன். அவரது மரணச் செய்தியை கேட்டதும் அந்த நிமிடங்கள்தான் கண்முன்னே தோன்றுகிறது.

பல பத்திரிக்கைளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் வாரந் தோறும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உருவாக்கியது.

அவர் சமரசமின்றி தனது கருத்துகளை எடுத்துறைத்து வந்தார். குறிப்பாக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும், மாற்று அரசியலுக்காக அவர் ஆற்றிய பணிகளும் அவருக்கு வரலாற்றில் சிறப்பான இடத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
15.01.2018