குவைத் மண்டலம் MKP சல்வா கிளை நடத்திய அரசியல் விழிப்புணர்வு கூட்டம்.

image

image

குவைத்.நவ.10., மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சல்வா கிளை நடத்திய அரசியல் விழிப்புணர்வு கூட்டம் இன்று 10/11/2017 வெள்ளிக்கிழமை மதியம் 1-மணிக்கு கத்தா 10 மஸ்ஜித் வளாகத்தில் கிளை செயளாலர் சகோ. ஏனங்குடி ஹசன் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.சாதிக் அலி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க.

மண்டல மருத்துவ அணி செயளாலர் சகோ.மாயவரம் சபிர் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின் மண்டல மக்கள் தொடர்பு செயளாலர் சகோ.பொதக்குடி சதக்கத்துல்லா அவர்கள் இன்றைய அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ.முசாவுதீன் அவர்கள் இரத்த தானம் விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறினார்.

கிளையின் செயல்பாடுகள் பற்றி மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகளால் பேசப்பட்டது. இரத்த தானம் முகாம் நிகழ்ச்சி பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தவும் தீர்மானம் ஏற்றப்பட்டு இறுதியாக கிளை பொருளாலர் சகோ.மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்:-
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
#MKP_குவைத்_மண்டலம்.
55278478-60338005-65510446.