புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனூரில் மதுப்பானக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்..! மஜக பங்கேற்பு..!!

மீமிசல். மே.03., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள வேள்வரை பஞ்சாயத்துக்குட்பட்ட கொழுவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் #CPIM மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பமக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி செல்வம், #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முபாரக் அலி, #மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மஜக மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், #நாம்_தமிழர்_கட்சி தொகுதி பொறுப்பாளர் டேவிட், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.DSP காமராசு தலைமையில், ஆய்வாளர் பாலாஜி உட்பட 50க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர், வட்டாச்சியர் கிருஷ்ணவேணி, கலால் துணை ஆணையர் பரணி ஆகியோர் டாஸ்மார்க் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்னும் ஓரிரு தினங்களில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் #கலெக்டர்_ஆபிஸ்_முற்றுகையிட்டு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்03.05.2018