கொரோனா காரணமாக நாடும், மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் இவற்றின் விலையை அதிகரிக்க செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு நேற்று முதல், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 25 காசும், டீசல் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும் என மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி அறிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் மத்திய அரசு, இவ்விரண்டிற்குமான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இம்மாத நிலவரப்படி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 26 டாலர் என சரிவை சந்தித்திருக்கிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் 'ஒபெக் ' நாடுகள், கச்சா எண்ணெய் விற்பனை ஆனால் போதும் என்ற நிலையில் உள்ளன. இச்சூழலில் அவற்றின் பலன் நம் மக்களுக்கு போய் சேராதபடி மத்திய - மாநில அரசுகள் விலை ஏற்றங்களுக்கு வழிகோலுவது சரியல்ல. இதன் மூலம் எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் முதலாளிகள் மேலும்,
You are here
Home > Posts tagged "பெட்ரோல்"