சென்னை.நவ.28.., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (28.11.2019) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், சென்னையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மண்டலம்.ஜெய்னுலாபுதீன், தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜ்தீன், ராசுதீன் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு. தீர்மானம் 1: கடந்த நவம்பர்-9 அன்று பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் அமையாமல் நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இனிவரும் பல வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இது தவறான முன்னோட்டமாக அமைந்து விட்டதே என்ற கவலையை இந்நிர்வாகக் குழு விரிவாக ஆய்வு செய்தது. ஜனநாயகம், அரசியல் சாசனசட்டம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு இத்தீர்ப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல கோணத்திலும் இந்நிர்வாகக் குழு விவாதித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. https://m.facebook.com/story.php?story_fbid=2120599028039861&id=700424783390633 தீர்மானம்:2 கடந்த 1993 முதல் பாபர் மஸ்ஜித் வழக்கிற்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் இத்தீர்ப்பை கண்டு பதறிப் போய் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
You are here
Home > Posts tagged "னிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம்"