நவ.25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமாவும், ஜெனரல் பஜார் மற்றும் பென்ஷனர் தெரு மஸ்ஜித் நிர்வாகமும் இணைந்து நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா சபை திருச்சி மண்டல பொறுப்பாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை கோடம்பாக்கம் ரஹ்மானியா மஸ்ஜித் தலைமை இமாம் சதக்கத்துல்லா பாக்கவி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி மாநகரில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் முத்தவல்லிகளும், உலமாக்களும், ஜமாத்துகளும் திரண்டிருந்த அந்த நிகழ்வில், அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட
You are here
Home > Posts tagged "நபிகள் நாயகம் (ஸல்)"