சேலம்.டிசம்பர்.16.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாவட்டச் செயலாளர் மஹபூப் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் O.S. பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின் ஷா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினர். இறுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தில் திருத்ததில் ஈழ தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும், நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களை புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சனாவுல்லாஹ் கான் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அஸ்லாம், சர்புதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம். 16-12-2019
You are here
Home > Posts tagged "தலைமைநிர்வாகிகள்பங்கேற்பு"