நாகை.டிச.01.., நாகூரில் பிரபல மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பள்ளியின் தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயர் அவர்கள் தலைமையில் விழா சிறக்க, அமைச்சர் திரு.OS.மணியன் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்வில் இருவரும் மரக்கன்றுகள் நட்டனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கி பள்ளி நிர்வாகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மழை சாரல்களுக்கிடையே மாலை, இரவு நிகழ்ச்சிகளாக, மாணவ, மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைப்பெற்றது. பள்ளியின் பணிகள், சேவைகள், சாதனைகள் அடங்கிய குறும்படமும் ஒளிபரப்பானது. மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்கள், வழங்கப்பட்டது. இதில் பேசிய அமைச்சர் திரு.OS.மணியன் அவர்கள், மாடர்ன் மெட்ரிக் பள்ளியின் சாதனைகளை புகழ்ந்து, தாளாளர் ஷேக் தாவூது மரைக்காயரின் பணிகளை பாராட்டினார். பிறகு அவர் பேசும் போது நாகூருக்கு ஒரு பெண்கள் கல்லூரியை நிச்சயம் கொண்டு வருவோம் என்றவர், தானும், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இணைந்து இப்பணியை செய்வோம் என்றும், இதற்காக 5 ஏக்கர் இடம் மட்டும் தந்தால் போதும்
You are here
Home > Posts tagged "கிரசண்ட் மற்றும் மாடர்ன் மெட்ரிக் பள்ளி"