குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!

image

நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதனை அடுத்து இன்று (29/11/2017) அப்பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகூர்ருக்கும், வாஞ்சூருக்கும் இடையில் உள்ள அப்பகுதியை நேரில் பார்வையிட்டார்.

அதன்பிறகு நகராட்சி ஆணையரை தொடர்புக் கொண்டு இனி அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும், அதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும், இப்போது இருக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் உத்தரவிட்டார்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
29.11.17