ஐ.நாவில் வைகோவை அவமதித்தது கண்டனத்துக்குரியது..! மஜக கண்டன அறிக்கை..!!

image

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை…)

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய மாநாட்டில் உரையாற்ற சென்ற திரு.வைகோ அவர்களுக்கு எதிராக சிங்கள இன வெறியர்கள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழ தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பது இலங்கையில் தமிழர்களுக்கு தனி வாக்கெடுப்பு நடத்துவது தான். இதுதான் உலக தமிழர்களின் நிலைப்பாடாகும். அதை தான் வைகோ அவர்கள் ஐ.நா.வில் எதிரொளித்திருக்கிறார்.

இதை சகிக்க முடியாத சிங்கள வெறியர்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஐ.நா.வில் #வைகோ அவர்களை தாக்க முயற்சி செய்திருப்பது,  அனாகரிகமானது என்பதை சிங்கள தலைமை உணர வேண்டும்.

இவண்,

#M_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.09.17