திறமையை நிரூபித்த தமிழ்நாடு காவல்துறை…

image

தமிழ்நாட்டை பரபரபாக்கிய சகோதரி #சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளி ராம்குமாரை நேற்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது தமிழ் நாட்டு மக்களை நிம்மதி பெற செய்திருக்கிறது.

இவ்விஷயத்தில் குறுகிய புத்தியுடன் சாதி,மத பதட்டத்தை தூண்டி ஆதாயம் பெற முயன்ற ஃபாஸிஸ்டுகளின் முகங்களை தமிழ் நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டு விட்டார்கள். அவர்களின் சகுனித்தனங்களும் இதன்மூலம் முற்றுப் பெற்றுவிட்டது.

சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தை தொடர்பு படுத்தி அவர்கள் யாரயேனும் அப்பாவியை கைது செய்ய வைக்க பல நெருக்கடிகள் உருவாக்கப்பட்ட போதும்,இந்த விஷயத்தில் காவல்துறையை நேர்மையாக செயல்பட வைத்த #தமிழக_முதல்வர்_டாக்டர்_அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுமையுடன், திறமையுடன் இவ்விஷயத்தில் புலனாய்வு மேற்கொண்டு கச்சிதமாக பிரச்சினைகளை கையாண்ட தமிழ்நாடு காவல்துறையையும் பாராட்டுகிறேன்.

இப்படிக்கு

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
02_07_16