மஜகவுக்கு தேர்தல் நிதி தாரீர்.!!

பேரன்புக்குரிய சகோதர,சகோதரிகளே.!!
உயிருக்குயிராய் நேசிக்கும் மனிதநேய சொந்தங்களே.!!
ஏக இறைவனின் அமைதியும்,சமாதானமும் உரித்தாகுக.!!

இறைவனின் பேரருளால் தமிழக தேர்தல் களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாபெரும் அரசியல் சக்தியாய் உருவெடுத்து வருகிறது . அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது முக்கிய கட்சியாக இடம்பெற்று சிறப்பான தொடக்கத்தை பெற்றிருக்கிறது. இப்போது விளம்பரங்களில்,அரசியல் செய்திகளில்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மஜகவும்,நமது கொடியும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கட்சி தொடங்கி 50 நாட்கள் கூட ஆகாத நிலையில்,தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்திற்கு முன்னேறியிருப்பது ஒரு சாதனை என பத்திரிக்கை நண்பர்கள்,அரசியல் தலைவர்கள்,விமர்சகர்கள்,அதிகாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பாராட்டி வியக்கிறார்கள்.எல்லா புகழும் இறைவனுக்கே.!!

கட்சி தொடங்கிய 26 நாட்களில் மாநில மாநாடு,35 நாட்களில் ஆளும் வெற்றிக் கூட்டணியில் 2 தொகுதிகள் பெற்றது ஆகியன சாதனை எனில்,திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் முதலில் களப் பிரச்சாரத்தில் குதித்ததும் மஜக தான் என ஒரு பத்திரிக்கை நண்பர் சிலாகித்து கூறினார்.

நமது அணுகுமுறைகளும் ,அரசியல் நகர்வுகளும் சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நம்மை ஒழிக்க நினைத்தவர்கள் நெஞ்சடைத்துப் போயுள்ளனர்.இவர்கள் தாக்குப் பிடிப்பார்களா ?என நினைத்தவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.இவர்கள் ஜெயிப்பார்கள் .. என கணித்தவர்கள் இப்போது கைதட்டி மகிழ்கிறார்கள்.எல்லாம் இறைவனின் நாட்டம். அனைத்தும் மாபெரும் வெற்றிக்கான முன்னோட்டம்.!!

அதன் எதிரொலியாக நமது மஜகவை நோக்கி நாலா புறங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும்,மாணவர்களும் திரள்கிறார்கள்.

நம்மை அழிக்க நினைத்தவர்களின் கூடாரங்களிலிருந்து நம்மை நோக்கிய நகர்வலம் தொடங்கிவிட்டது.இறைவன் நாடினால் அது ஊர்வலமாக விரைவில் மாறும்!!சுயநலமற்ற ஒரு பொதுநல தலைமை எது என்பது பூங்காற்று வீசுவதுப் போல புரியத் தொடங்கிவிட்டது.எல்லாப் புகழும் இறைவனுக்கே..

#சொந்தங்களே.!!

நமது நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் மஜக சொந்தங்கள் தீவிரமாய் களமாடுவதுபோல,அதிமுகவின் நிர்வாகிகளும்,தொண்டர்களும் அசுர வேகத்தில் ஆட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.எங்களின் அம்மா… ஆணையிட்டுவிட்டார்..!!நாங்கள் அசராமல் வெற்றிக்கு உழைப்போம்..!!என சபதமிட்டு புறப்பட்டு விட்டார்கள்.அதுதான் அதிமுக தொண்டர்களின் சிறப்பாகும்.தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு;கருத்து வேறுபாடுகளை களைந்து;களத்தில் வெற்றிக்காக பாடுபடும் தொண்டர்கள் நிறைந்த பேரியக்கமாக அதிமுகவை பார்க்க முடிகிறது.

சொந்தங்களே!

அதேபோல மீதி 232 தொகுதிகளிலும் மஜகவினர் உழைக்கவேண்டும்.நமது மஹல்லாக்களில் 70 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர அரும்பாடுபட்டு செயலாற்றிட வேண்டும்.!!

களத்தில் ஆறுமுனைப் போட்டி நிலவும் சூழலில் ,மிக எளிதாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிவாகை சூடும் நிலை உள்ளது என்பதை எதிர்கட்சியினரே ஒத்துக் கொள்கின்றனர்.!!

இறைவன் நாடினால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரப் போகிறது. அந்த ஆட்சியில் நம்மை நம்பி வந்திருக்கும் மக்களுக்கு உருப்படியான நல்ல காரியங்கள் செய்து கொடுக்கும் அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மதக் கலவரங்களை கட்டுப்படுத்தி ; சமூக பதட்டங்களை தனித்து ; குறிப்பிட்டு சொல்லும்படியான அதிருப்திகள் ஏதுமின்றி ஒரு அமைதியான ஆட்சியாக கடந்த அதிமுக அரசின் 5 ஆண்டுகள் இருந்திருக்கிறது என்ற எதார்த்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்! அதுபோதும்.

எனவே அதிமுக கூட்டணிக்கு நமது வாக்குகளை அதிகமாக செலுத்தினால் தான்,நாளை உரிமைகளை பெற்றுக் கொடுக்க உரத்து குரல் கொடுக்க முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

#சொந்தங்களே.!!

முக்கிய விஷயத்திற்கு வருவோம்.இப்போது களத்தில் நாம் முன்னிலையில் இருந்தாலும்,நிதி நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கின்றோம்.அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதற்கு கூட போதிய நிதியின்றி தடுமாறுகின்றோம்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் செலவாகிறது.

இந்நிலையில் தான் வழக்கம்போல் மக்கள் மன்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.நமது நிதிவங்கி என்பது அவர்கள்தானே..!!யார் யாருக்கோ தருபவர்கள்,மனிதநேய போராளிகளான நமக்கு தர மாட்டார்களா.? நிச்சயம் தருவார்கள்.!!அந்த நம்பிக்கை இருக்கிறது.

மனிதநேய சொந்தங்களே..!!
புறப்படுங்கள் வீடு வீடாக..கடை,கடையாக..நிதி திரட்ட புறப்படுங்கள்.செல்வந்தர்கள்,சாமான்யர்கள்.பாட்டாளிகள் என சகல தரப்பினரையும் சந்தியுங்கள்.

சிறுதுளி பெரு வெள்ளமாகும் என்பதுபோல..சிறு தொகைகள் சேரும்போது அது பெரும் நிதியாக மாறும்.உள்நாடுகளிலும்,வெளிநாடுகளிலும் வாழும் தமிழக,புதுச்சேரி மக்களிடம் நிதியை திரட்ட திட்டமிடுங்கள் .

பெரிய மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் குறைந்தது 5 லட்சம் ரூபாயும்,சிறிய மாவட்டங்கள் அல்லது மண்டலங்கள் 3 லட்சம் ரூபாயும் இலக்காக கொண்டு நிதி திரட்டுவீர்.!!

வியர்வை சிந்தி நீங்கள் திரட்டிதரும் நிதியைக் கொண்டு களத்தில் வெற்றியைக் குவிப்போம்.!!நாளை நமதே.!!என்ற முழக்கத்தை இறையருளால் சாத்தியப்படுத்துவோம்.!!

#களங்களில்_நாங்கள் #கலங்குவதில்லை
#கந்தக_விழிகள்_உறங்குவதில்லை #என்பதை_நிருபிப்போம்!

அன்புடன்.
M.தமிமுன் அன்சாரி
பொதுசெயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

நன்கொடை தொடர்புக்கு: N.A.தைமிய்யா-9788857018